நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சமூக நீதிக்கான மாணவர்-இளைஞர் கூட்டமைப்பு சார்பாக தொடர் முழக்க போராட்டம்..!
சேலத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சமூக நீதிக்கான மாணவர்-இளைஞர் கூட்டமைப்பு சார்பாக தொடர் முழக்க போராட்டமானது இன்று (27-9-2017) காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கலந்துக் கொண்டு விளக்கவுரையாற்றினார். அதே போன்று சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். இப்போராட்டத்தில் DYFI, SFI, AIYF, AISF, DMK, VCK, மநேமக, தமுமுக, பகுஜன் சமாஜ் ஆகிய அமைப்புகளின் மாணவர்கள் இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்தனர்.