சென்னையில் பல்லாயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் ..!

Default Image

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் 8-வது ஊதியக்குழுவை அமல் படுத்தும் முன் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இன்று கோட்டையை நோக்கி பேரணி  நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், பேரூந்துகளில் வந்த ஆசிரியர்களை போலீசார் சுங்கச்சாவடிகளில் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகிறார்கள்.

இதுவரை 2000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தை நசுக்கும் வகையில் செயல்படும் தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து ஆங்காங்கே சுஙுகச்சாவடிகள் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.                        

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்