ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய மன்ப்ரீத் கவுர் : பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு
புதுடில்லி : சமீபத்தில் நடந்த ஆசிய தடகள போட்டியில் இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்ப்ரீத் கவுர் தங்கம் வென்றார்.இந்நிலையில் சமீபத்தில் ஊக்கமருந்து சோதனை நடந்தது. அப்போது மன்ப்ரீத் கவுர் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளது. பட்டியாலா பெடரேசன் கப் சார்பில் ஜூன் 1 முதல் 4 வரை நடந்த சோதனையின் போது மன்ப்ரீத் தோல்வியடைந்தார். இதனால் ஆசிய தடகள போட்டியில் அவர் வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தடகள வீராங்கனையான இவர் அடுத்த மாதம் லண்டனில் நடக்க உள்ள சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி உள்ளது அவரது எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது.