ஐ.சி.சி., புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!
புதிய விதிமுறைகள் வரும் 28ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் விவரம்: எதிரணி வீரர்கள் அல்லது அம்பயருடன் மோதலில் ஈடுபடும் வீரர்கள் களத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவர். கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பவுலர்கள் இடையே சமமான போட்டி நிலவ முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒரே அளவிலான ‘பேட்டை’ பயன்படுத்த வேண்டும். இனி, வீரர்கள் அம்பயர் மறுபரிசீலனை முறையில் (டி.ஆர்.எஸ்.,) துணிச்சலாக ‘ரிவியூ’ கேட்கலாம்.’அம்பயர் கால்’ என அறிவிக்கப்பட்டாலும், ‘ரிவியூ’ வாய்ப்பு பறிபோகாது.