“வளர்ச்சி’, ‘வளர்ச்சி’ என மோடி ஒன்றும் சும்மா மார்தட்டவில்லை…!
அந்தக் கொடூரமான வீடியோவைப் பார்க்க முடியவில்லை. பதைபதைப்பும், அவமானமும் அழுத்த, கண்கள் குளமாக ஓவென்று கதற வேண்டும் போலிருக்கிறது.
உத்திரப்பிரதேசத்திலா, இராஜஸ்தானிலா, நேற்றா, இன்றா என்று விவாதங்கள் நடக்கின்றன. இந்தியாவில் பல இடங்களில் கடந்த சில வருடங்களில் தொடர்ந்து இதுபோன்று கொடுமைகள் நடந்து கொண்டு இருக்கின்றன என கூகிள் பட்டியலிடுகிறது.
சங் பரிவாரக்கூட்டத்தினர் ஆட்சிக்கு வந்த பிறகு யாருடைய ஆதிக்கமும், செல்வாக்கும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்பதன் அடையாளங்களே இவை.
‘பாரத் மாதா கீ ஜெய்’ என தொண்டை வெடிக்கும் குரல்களோடு, அழுகிப் போன மதத்தின், ஜாதியின் வெறியாட்டங்களோடு அவர்கள் கடந்த காலத்திலிருந்து பாய்ந்து வருகின்றனர்.
“வளர்ச்சி’, ‘வளர்ச்சி’ என மோடி ஒன்றும் சும்மா மார்தட்டவில்லை
Lovers stripped in india என்றோ, dalits stripped in india என்றோ கூகிளில் தேடினால் இந்த தேசமென்பதின் இருண்ட காலத்தை அறிய முடியும்.
-மாதவராஜ்
இது போன்ற நிகழ்வுகளும் நிகழ்த்தபடுவது இதே இந்தியாவில் தான்…
உத்திர பிரதேசத்தில் மகள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த வாலிபரை காதலித்தால் அவர்களது தந்தையே இந்து மத,ஜாதி வெறியர்கள் முன்னிலையில் அவர்களை அடித்து அம்மணமாக்கி நடத்திய பேரணி…
காதல் என்ன அவ்வளவு கொடியதாய் …??
அம்மணமானது அவர்களது உடல்கள் மட்டுமல்ல … உலக அரங்கில் இந்தியாவின் மானமும் தான்…!
-சுரேஷ் இசக்கிபாண்டி