தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு அலங்கார பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்..!
தசரா திருவிழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான அலங்கார பொருட்களை தயாரிக்கும் பணி உடன்குடி பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வேடங்களை அணியும் பக்தர்களும் பல்வேறு நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான கிரீடம், தலைமுடி, கைகள், மார்பு கவசம், திரிசூலம், வாள், ஈட்டி, கண்மலர், ஒட்டியாணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.