தூத்துக்குடி மாவட்டத்தில் கலாம் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது

Default Image

தூத்துக்குடியில் ஏரல் மற்றும் விளாத்திகுளத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாயர்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஓபிசி மாநில அமைப்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி சிவகளையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துகிருஷ்ணனுக்கு ஏர்கம்ப்ரைசர் மிஷினை ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.  நிகழ்ச்சியில்ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டாரத் தலைவர் சுயம்புலிங்கம், சாயர்புரம் நகரத் தலைவர் மணி, முன்னாள் வட்டாரத் தலைவர் நல்லக்கண்ணு, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் மச்சேந்திரன், சிவகளை காங்கிரஸ் தலைவர் பிச்சையா, சாயர்புரம் ஓபிசி அமைப்பாளர் சொரிமுத்து பிரதாபன்,ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவன்ராஜ் மற்றம் புன்னைவனம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 
விளாத்திகுளம்: நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்பு கல்லூரியில் நடந்த அப்துல் கலாம் நினைவுதினத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரளாகப் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்