மைக்கேல் ஜாக்சனின் செல்லப்பிராணியான மனிதக் குரங்கு வரைந்த ஓவியங்களின் கண்காட்சி!!

Default Image

மியாமி: மைக்கேல் ஜாக்சனின் செல்லப்பிராணியான மனிதக் குரங்கு வரைந்த ஓவியங்களின் கண்காட்சி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் நடைபெற்று வருகிறது. பப்புள்ஸ் எனப் பெயரிடப்பட்ட 34 வயது மனிதக் குரங்கு, பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனால் வளர்க்கப்பட்டது. அது, மனிதர்களைப் போன்றே தூரிகையைப் பிடித்து, பல்வேறு வண்ண ஓவியங்களை அழகாகத் தீட்டி காண்போரை அசத்துகிறது. பப்புள்ஸ் வரைந்த ஓவியங்களும், மைக்கேல் ஜாக்சனுடன் அது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சி நேற்று தொடங்கியது. இதைப் பார்த்த ரசிகர்கள், ஆர்வத்துடன் போட்டி போட்டு அதிக விலை கொடுத்து ஓவியங்களை வாங்கிச் செல்கின்றனர்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்