போலீஸ் வேடத்தில் திருடர்கள்!!

Default Image

 உ.பி., மதுராவை சேர்ந்தவர் சவுரப் கந்தேல்வால். நகை வியாபாரியான இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தொழிலதிபர் ஒருவருக்கு வெள்ளி பொருட்களை விநியோகம் செய்வதற்காக, மற்றொரு நகை வியாபாரியான முகேஷ் மற்றும் ரவி என்ற ஊழியருடன் சாந்தினி சவுக் பகுதியை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது நொய்டா – டெல்லி எல்லையில் உள்ள சோதனை சாவடி ஒன்றில் மூன்று பேர் போலீஸ் சீருடை அணிந்து, காரை வழிமறித்து சோதனை செய்தனர். பின்னர், காரை விட்டு வெளியில் வரும்படியும் கூறி உள்ளனர். ஆனால் முகேஷ் உள்பட மூன்று பேர் வெளியில் வர மறுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த போலி போலீஸ் சவுரப்பை காரில் இருந்து வெளியே இழுத்து தள்ளிவிட்டு, டிரைவர் சீட்டில் அமர்ந்துக் கொண்டார். இதேபோல் மற்ற இரண்டு பேரும் முகேஷ் மற்றும் ரவியை வெளியில் அப்புறப்படுத்திவிட்டு காருக்குள் அமர்ந்து மின்னல் வேகத்தில் தப்பினர்.இவர்கள் போலீஸ் போன்று நடித்து ஏமாற்றி இருப்பதை சுதாரித்துக் கொண்ட நகை வியாபாரிகள், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அதோடு, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர்..

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்