நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.,க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.,க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் தமிழக சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற வலியுறுத்தப்பட்டது. திமுக ராஜ்யசபா எம்.பி.,க்கள்,டிகேஎஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி பங்கேற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிகளுக்கும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.