ஆப்கானில் அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் பலர் உயிரிழப்பு?

Default Image
ஆப்கானுக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் வருகை புரிந்துள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை ராக்கெட்டுகள் மூலம் தாக்கிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடும் ஆப்கான் இராணுவத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின் வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் அவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை.
தாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 3000 ராணுவவீரர்கள் அனுப்பப் போவதாக அண்மையில் அமெரிக்கா உறுதி செய்ததுள்ளது.
ஆப்கானில் தற்போது உள்ள ரிசலுயூட் சப்போர்ட் என்றழைக்கப்படும் நேட்டோ பணிக்குழு வெளியிட்ட அறிக்கையில், ”துரதிர்ஷ்டவசமாக வான் வழி தாக்குதலில் செலுத்தப்பட்ட ஏவுகணையொன்று சரியாகச் செயல்படாததால் ஏரளாமான உயிரிழப்புகள் ஏற்பட்டது” என்று தெரிவித்திட்டுள்ளது.
முன்னதாக, ஜேம்ஸ் மேட்டிஸ் வந்த விமானத்தை தாங்கள் குறிவைத்ததாக தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு ஆகிய இரு தரப்பும் காபூல் விமான நிலையத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலுக்கு உரிமை கோரின என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்