டில்லியில் ஜனாதிபதி ஆட்சி ஜனாதிபதி ஆட்சி வேண்டும் பா.ஜ., வலியுறுத்தல்..,
புதுடில்லி:டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தினார்.பார்லிமென்டின் லோக்சபா வில் நேற்று ஜீரோ அவரில் பா.ஜ.க. எம்.பி. (கிழக்கு டில்லி) மகேஷ் கிரி பேசியதாவது:டில்லியில் நிலவும் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசு தவறிவிட்டது. எனவே, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான இந்த அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.ஒரு பாராளுமன்றத் தொகுதியானது, ஒரு உள்ளாட்சி நிர்வாக பகுதிக்கு கீழ் மட்டுமே வரவேண்டும். பல மாவட்டங்கள் பல மாநகராட்சி அதிகாரிகள் இருப்பதால் பணிகளை நிறைவேற்றுவதில் மிகவும்கால தாமதம் ஆகிறது. அரசுப் பணமும் வீணாகிறது. ஒத்திசைவு வேண்டும்எனது தொகுதியின் 80 சதவீத பகுதி கிழக்கு டில்லி மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. மற்ற பகுதி தெற்கு டில்லியில் வருகிறது. பாராளுமன்ற தொகுதி, நிர்வாகப் பகுதிக்கு இடையே ஒத்திசைவு இருக்க வேண்டும். என்று கூறினார்…