நீரில் மூழ்கிய நண்பன் -செல்பி எடுத்த நண்பர்கள்..!
கர்நாடக மாநிலம் ஜெயநகர் பகுதியில் உள்ள நேஷனல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்.சி.சி பயிற்சிக்காக ராமநகரா மாவட்டத்தின் அருகே உள்ள ரவகோண்ட்லு பெட்டா என்ற மலைப்பகுதிக்கு சமீபத்தில் சென்றனர்.
அந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அருகில் உள்ள ஒரு ஏரிக்கு ஒரு குழுவாக சென்றுள்ளனர். அங்கு அவர்கள் குளித்துக்கொண்டிருக்கும் போது விஸ்வாஸ் என்ற மாணவர் தண்ணீரில் தத்தளித்த படி நீரில் மூழ்கியுள்ளார். ஆனால், அதை கவனிக்காத அவரின் நண்பர்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.நீரில் முழ்கி இறந்த விஷ்வாஸின் உடலை போலீசார் மீட்டனர்.