ராகிங்கை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கணும்… யுஜிசி அறிவுறுத்தல்

Default Image
சென்னை:  ராகிங்கை தடுத்து தீவிர நடவடிக்கை எடுக்கணும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களில், ‘ராகிங்’கை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, யு.ஜி.சி., செயலாளர் ஜஸ்பால் சந்து, கல்லுாரிகள், பல்கலைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பழைய மாணவர்கள், புதியவர்களை, ‘ராகிங்’ செய்யும் நடவடிக்கை, கிரிமினல் குற்றம். இது குறித்து, பல்வேறு வழிகாட்டுதல்கள், கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. முதல்வரின் அறை முன், புகார் பதிவு புத்தகம் வைக்க வேண்டும்

கல்லுாரி வளாகம் முழுவதும் தெரியும்படி, கண்காணிப்பு கேமரா, செயல்பாட்டில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்தி, ‘ராகிங்’ நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். மாணவர்களிடமிருந்து புகார் வந்தால், உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘ராகிங்’ கண்காணிப்பு கமிட்டி அமைத்து, கல்லுாரி வளாகத்தில், ஆசிரியர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இவ்வாறு பல அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்