குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடுவை நாங்களும் ஆதரிக்கிறோம்:டி.டி.வி.தினகரன்

Default Image
சென்னை:துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த பதவிக்கான தேர்தல் வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அதேபோன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலிலும் ஓபிஎஸ் அணியும்,எடப்பாடி அணியும்,டி.டி.வி.தினகரன் அணியும் முன்டி அடித்து முதல் ஆளாக ஆதரவு அளித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தான் இந்த தேர்தலிலும் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக. புரட்சித்தலைவி அம்மா அணியும், அதிமுக அம்மா அணியும் அறிவித்திருந்தது.ஆனால் அதிமுக  அம்மா அணியிலும் தற்போது எம்எல்ஏக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிய துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். துணை ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் நிலைப்பாடு குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், பெங்களூர் சிறைச்சாலையில் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை இன்று சந்தித்த டி.டி.வி. தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது, குடியரசு துணைத் தலைவ்ர் தேர்தலில் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலலாவின் உத்தரவின்பேரில் ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்