சிங்கம் களமிறங்கிடுச்சேஏஏஏ…!!!இனி சிங்கத்தின் வேட்டை தொடரும்….

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு முதல் களமிறங்க உள்ள தகவலை அந்த அணிக்கான டிவிட்டர் பக்கம் நேற்று இரவு அதிகாரப் பூர்வமாக மீண்டும் அறிவித்துள்ளது. மும்பை மற்றும் புனே அணிகள் நடுவேயான நேற்றைய பைனல் போட்டி நிறைவடைந்த பிறகு, இந்த டிவிட்டை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு பெரிய விசிலு அடிங்க என்ற கோஷம் இந்த அணிக்கானது. அணியின் கேப்டனாக ஆரம்பம் முதலே டோணிதான் செயல்பட்டு வந்தார். அவர் புனே அணிக்காக ஆடிய விதம் சில விமர்சனங்களை ஈட்டித் தந்த போதிலும், சென்னை அணிக்காக அவர் ஆடிய அத்தனை சீசனிலும் டோணியின் ஆட்டமும், கேப்டன்ஷிப்பும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. டோணிதான் மீண்டும் சி.எஸ்.கே அணி கேப்டனாக செயல்படுவார் என இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் சீனிவாசன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்