காமன்வெல்த் யூத் விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சச்சின் தங்கம் வென்றார்

Default Image
நாசாவ்: காமன்வெல்த் யூத் விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சச்சின் (49 கி.கி.,) தங்கம் வென்றார்.

பகாமசின் நாசாவ் நகரில் காமன்வெல்த் யூத் விளையாட்டு (14 முதல் 18 வயது வரை) நடந்தது. இதில் 64 நாடுகளில் இருந்து 1,300 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும், ஒரு அணிக்கு தலா 2 வீரர், 2 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆண்களுக்கான 49 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் சச்சின் 4-1 என்ற கணக்கில் வேல்சின் ஜேம்ஸ் நாதன் புரோபர்ட்டை தோற்கடித்து தங்கம் வென்றார். கடந்த ஆண்டு நடந்த உலக யூத் குத்துச்சண்டை போட்டியில் சச்சின், தங்கம் வென்றிருந்தார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்