சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா மீது கந்துவட்டி புகார் …!

Default Image
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தங்க வியாபாரி ஹானந்தர் என்பவர், சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா மீது கந்துவட்டி புகார் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜா ஆகியோர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் சினிமா ஃபைனான்ஸியர் போத்ரா. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், போத்ரா மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது கடந்த 25-ம் தேதி சதீஸ்குமார் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவில் கந்துவட்டி புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், போத்ரா மற்றும் அவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, தங்க வியாபாரி ஹானந்தர் என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் போத்ரா மீது இன்று கந்துவட்டி புகார் அளித்துள்ளார். அதில், “2015-ம் ஆண்டு போத்ராவிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்தேன். 5 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துவிட்டேன். இன்னும் 2.75 கோடி ரூபாய் கேட்டு போத்ரா மிரட்டுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்