எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்: எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Default Image

புதுடில்லி:மத்திய பிஜேபி அரசின் ஆட்சியில்தான் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகள் நடக்கிறது.அது தொடர்பாக லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறு பேர், காகிதங்களை கிழித்து, சபாநாயகர் மீது வீசினர். இதனால், அவர்களை, ஐந்து நாட்களுக்கு, ‘சஸ்பெண்ட்’ செய்து, சபாநாயகர், சுமித்ரா மகாஜன் அதிரடியாக உத்தரவிட்டார். காங்கிரஸ் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே அளித்த பேட்டி: மீராகுமார் சபாநாயகராக இருந்த போது இது போன்று நடந்ததில்லை. அவர் எப்போதும் கோபப்பட மாட்டார். அரசின் நெருக்கடிக்கு சபாநாயகர் அடிபணிய கூடாது. சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்று, எம்.பி.,க்களை அவை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்