கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கறுப்பின பெண் மருத்துவர் உயிரிழப்பு!

Default Image

கொரோனவால் பாதிக்கப்பட்டு இந்தியானா யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கறுப்பின பெண் மருத்துவர் உயிரிழந்தார்.

சூசன் மோர் ஒரு கருப்பினப் பெண் மருத்துவர் ஆவார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ‘இந்தியானா யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த்’ என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் படுக்கையிலிருந்து அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் தனக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில் நான் கறுப்பின பெண் என்பதால் எனக்கு முறையாகச் மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை.எனக்கு சிகிச்சை அளித்தவர் ஒரு வெள்ளை இன மருத்துவர். என் நுரையீரல் எப்படி செயல்படுகிறது, எனக்கு எனது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று அந்த மருத்துவர் என்னை பரிசோதிக்கவில்லை. என்னை தொட்டுக்கூட பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நான் ஏதோ போதை பொருளுக்கு அடிமையானவர் போல எனக்கு சிகிச்சையளித்த அளித்த மருத்துவர்கள் என்னை உணர வைத்தார். நான் ஒரு மருத்துவர் என்பது அவருக்கு தெரியும். நான் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டேன். இப்படித்தான் கருப்பின மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் தனது காணொளியில் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு இணையத்தில் இந்த வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். இவ்வாறு வீடியோ வெளியிட்ட சூசன் மோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது கறுப்பின மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்