இந்த ஆண்டு இந்திய அளவில் ட்வீட்டரில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் தான் என்று ட்வீட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடைபெறும் பொழுது வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தினர் அதற்கு பிறகு நேரடியாக நெய்வேலிக்கு சென்று விஜயிடம் விசாரணை நடத்தினார் பிறகு விசாரணை நடைபெற்று முடிந்தவுடன் நடிகர் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அப்போது அங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் . இந்த தகவலை கண்ட விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் கூட்டமாக அப்பகுதியில் கூடினார்கள்.
பிறகு நடிகர் விஜய் படப்பிடிப்பு முடித்துவிட்டு ரசிகர்களை பார்த்த விஜய் அங்குள்ள பேருந்தின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். உடனடியாக அந்த செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தமிழ் சினிமாவில் ட்வீட்டரில் அதிகம் லைக்ஸ் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றது.
இதனை தொடர்ந்து ட்வீட்டர் நிறுவனம் இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி தான் என்று அதிகார்வ பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் #VIJAYRuledTwitter2020 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…