மாதவிடாய் காலத்தில் அதிக வலியா..? இந்த காய்கறியை இனி உணவிலிருந்து ஒதுக்காதீர்கள்..!

Default Image

கசப்புக்காய் என்று அழைக்கப்படும் பாகற்காய் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கக்கூடியது. ஆனால் இதன் கசப்பு தன்மையால் பலரும் விரும்பி இதனை உண்பதில்லை. இனி இந்த காய்கறியை உணவிலிருந்து ஒதுக்க வேண்டாம். பாகற்காய் மட்டுமல்ல, அதன் இலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகள் மாதவிடாய் வலிக்கு நிறைய நிவாரணம் தருகிறது. எனவே அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். மாதவிடாய் வலி பெண்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. அவர்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். இதற்குப் பிறகும் அவர்களின் வலி குறைவதில்லை. அதனால் அத்தகைய பெண்கள் கவலைப்படத் தேவையில்லை.

ஏனென்றால் அவர்களுக்கான செய்முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இது அவர்களின் வலியை நிச்சயமாக நீக்கும். நீங்கள் அனைவரும் எப்போதாவது பாகற்காய் சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் மருந்தாகப் பயன்படுகிறது என்பது மிகச் சிலருக்குத் தான் தெரியும். பாகற்காய் இலையில் வைட்டமின் சி முதல் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வரை அனைத்தும் அடங்கியுள்ளது. அவை பல வகையான பிரச்சினைகளிலிருந்து விடுபட நன்மை பயக்கும்.

மேலும் இந்த பாகற்காய் மற்றும் அதன் இல்லை நீரிழிவு, தலைவலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும். அதே வேளையில், இது மாதவிடாய் வலியை போக்குவதில் முக்கிய பங்களிக்கிறது. மாதவிடாய் வலியை குறைக்க, 10 முதல் 15 பாகற்காய் இலைகளை அதன் சாறு எடுத்து அதில் கருமிளகு பொடியை கலந்து சாப்பிடுங்கள். இந்த கலவையை சிறிது தண்ணீர் சேர்த்தும் குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதால் மாதவிடாய் வலியில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்