பிறக்கின்றது சார்வரி தமிழ் புத்தாண்டு : எச்சரிக்கும் பஞ்சாங்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ் புத்தாண்டு – சித்திரை 1ம் தேதி

ஆண்டுதோறும் ஒவ்வொரு தமிழ் மாத சித்திரை 1 (ஏப்ரல் 14ம் தேதி) தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லாம் கோவில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர். மக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர்.

சார்வரி தமிழ் புத்தாண்டு :

சார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று ஏப்ரல் 13ம் திகதி 2020, பங்குனி 31ம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது. இதேவேளை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று இரவு 7.26 மணிக்கு பிறக்கின்றது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய், குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். இது 60 ஆண்டுகளில் 34வது வருடம் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

சார்வரி ஆண்டு எப்படி இருக்கும்.? எச்சரிக்கும் பஞ்சாங்கம் :

இந்த சார்வரி ஆண்டில் மக்கள் நோயால் திரிவார்கள் என்றும் நாட்டில் மழை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் இருக்காது என கூறப்படுகிறது. பூமியில் நவதானியங்களின் விளைச்சலை பாதிக்கும். மேலும் மக்கள் உணவின்றி தவிக்கும் நிலைமை ஏற்படும். ஆனால் நவகிரகங்களின் சஞ்சாரத்தின் படி நல்ல பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. அதனால் இந்த சார்வரி புத்தாண்டில் மழை குறைவாக இருக்கும் என்றாலும் சித்திரை வருடப்பிறப்பு புதன்கிழமை வருவதால் நல்ல மழை பெய்யும் என்றும் ஆண்டின் முற்பகுதியில் உஷ்ணமும் பிற்பகுதியில் அதிக மழையும் பெய்யும் என்று சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே உலுக்கி வருகிறது. அதே போல பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டான சார்வரி ஆண்டிலும் புதிய நோய் தாக்கும் என பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :

எது எப்படி இருந்தால் என்ன.! எல்லாரும் நல்லதே நினைப்போம்.! தமிழ் புத்தாண்டை, அனைவருக்கும் நல்வாழ்வு கிடைத்திட மகிழ்வோடு வரவேற்போம். கொரோனா பரவலில் சிக்கி தவிக்கின்ற நிலை மாறி, அமைதியும், நிம்மதியும் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம். மேலும் நாட்டு மக்கள் நலம் பெற, கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் காவல் துறையினா், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் நம்பிக்கையுடன் எதையும் எதிா்கொண்டு வரும் தமிழக மக்கள் ஆகியோருக்கு எங்கள் தினச்சுவடு சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்! 

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

36 minutes ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

2 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

2 hours ago

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

இஸ்லாமாபாத் :  நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…

2 hours ago

“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

3 hours ago

ரெய்டை திசை திருப்ப இப்படி பண்றோமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…

3 hours ago