உபர் கார் ட்ரைவர் மீது பிக்பாஸ் பிரபலம் புகார்!

Default Image

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை ரித்விகா, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து நடிகை ரித்விகா தனது ட்வீட்டர் பக்கத்தில், உபர் நிறுவனத்தின் கார் ஓட்டுநராக ஜெய்னுலாப்தீன் என்பவர் மீது புகார் கூறி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இவர் பாதுகாப்பற்ற முறையில், ராஷ் டிரைவிங் செய்ததாகவும், வண்டியின் என்னையும், காரின் பெயர் டாட்டா இண்டிகா என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த உபரி நிறுவனம், ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்