நவம்பர் 5ஆம் தேதிதான் வழக்கு விசாரனை! நாளை பிகில் வெளியாக தடை இல்லை!

Default Image

தளபதி விஜய் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏ..ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.
இந்த பிகில் படத்தின் கதை தன்னுடைய பிரேசில் கதையோடு ஒத்துப்போவதாக கூறி அம்ஜத் மீரான் எனப்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்காக தனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று முடிந்தது. அதனை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கையெழுத்து பிரதியாக இல்லாமல், டைப் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் நாளை வெளியாக தடையில்லை எனவும், வழக்கு விசாரணை நவம்பர் 5ஆம் தேதி  ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்