இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட 5000 கிலோவுக்கும் மேல் எடைக்கொண்ட குண்டு வெடித்தது!

Default Image

5000 கிலோவுக்கும் மேல் இருக்கும் வெடிகுண்டை செயலிழக்கும் முயற்சியின் பொது வெடித்து சிதறியது.

இரண்டாம் உலக போரின்போது வீசப்பட்ட குண்டுகள், பல இடங்களில் வெடிக்காமல் போனது.  அந்தவகையில், போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது, 1945 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டினரால் வீசப்பட்டதாகவும், 5000 கிலோவுக்கும் மேல் எடைகொண்டுள்ளதாகவும், இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட மிகப்பெரிய குண்டுகளில் இதுவும் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது.

நீருக்குள் இருந்த அந்த வெடிகுண்டை செயலிழக்கும் முயற்சியினை போலந்து நேவி (கடற்படையினர்) தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இதன்காரணமாக அந்தப்பகுதியில் உள்ள மக்களை அவர்கள் வெளியேற்றினார்கள். வெடிகுண்டை செயலிழக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்தது.

இதனால், கால்வாயின் மேல் பல மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் அலை போல எழுந்தது. அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த குண்டு வெடிப்பு காரணமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update