அமெரிக்க ஐடி நிறுவனத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்;800 கடைகளை திறக்க முடியாமல் தவித்த ஸ்வீடன்…!

Published by
Edison

அமெரிக்க ஐடி நிறுவனத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்ததையடுத்து,ஸ்வீடன் 800 கடைகளை திறக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஐடி நிறுவனத்தின் மென்பொருள் சப்ளையரான கசேயா மீதான ரன்சொம்வேர் (ransomware) சைபர் தாக்குதலுக்குப் பின்னர் ஸ்வீடனில் உள்ள கூப்பின் நிறுவனம் தனது 800 மளிகை கடைகளை திறக்க முடியாமல் தவித்தது.காரணம், அவற்றின் பணப் பதிவேடுகள் செயல்படவில்லை என்று நாட்டின் பொது ஒளிபரப்பாளர் தெரிவித்தார்.

மேலும்,இந்த சைபர் தாக்குதலால் கிட்டத்தட்ட 200 அமெரிக்க வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கூப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”நாங்கள் இரவு முழுவதும் சரிசெய்தல் மற்றும் பழைய நிலைக்கு மீட்டமைத்து வருகிறோம்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,மியாமியைச் சேர்ந்த கசேயா கூறுகையில்,”இது எஃப்.பி.ஐ (FBI) உடன் இணைந்து செயல்படுவதாகவும், அதன் வாடிக்கையாளர்களில் சுமார் 40 பேர் மட்டுமே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்”,தெரிவித்தது.ஆனால், தீங்கு விளைவிக்கும் மென்பொருளை மற்றவர்களுக்கு பரப்பியவர்களில் எத்தனை பேர் வழங்குநர்கள் என்பது குறித்து அது கருத்து தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து,யு.எஸ். சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து விசாரிப்பதாக நேற்று எஃப்.பி.ஐ தெரிவித்தது.

சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இதுகுறித்து கூறுகையில்:”ரஷ்ய மொழி பேசும் ரன்சொம்வேர் சிண்டிகேட் ரெவில் கும்பல், கசேயா என்ற மென்பொருள் சப்ளையரை குறிவைத்து, அதன் நெட்வொர்க்-மேலாண்மை தொகுப்பைப் பயன்படுத்தி கிளவுட்-சேவை வழங்குநர்கள் மூலமாக ரன்சொம்வேர் வைரஸ் பரப்பியுள்ளனர்.வாரத்தின் விடுமுறை நாட்களில் பெரும்பாலான கார்ப்பரேட் ஐடி குழுக்கள் முழுமையாக பணியாற்றாதபோது இது நடந்தது.”, என்று தெரிவித்தனர்.

யு.எஸ்.பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹல்க்விஸ்ட் ஸ்வீடிஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: “இந்த தாக்குதல் மிகவும் ஆபத்தானது.இது வணிக மற்றும் அரசு நிறுவனங்கள் தங்கள் தயார்நிலையை மேம்படுத்துவதற்கு எவ்வாறு தேவை என்பதைக் காட்டியது.இதுபோன்ற குழுக்களை சட்டத்திற்கு முன்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”என்று கூறினார்.

Published by
Edison

Recent Posts

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

8 minutes ago

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

1 hour ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

2 hours ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

2 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

3 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

3 hours ago