#Breaking:ராஜினாமா கடிதம் – கையெழுத்திட்டார் கோட்டபாய ராஜபக்சே?..!

Default Image

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  மாளிகையை கைப்பற்றியுள்ளனர்.இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடி ராணுவ தலைமையகத்திற்கு சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து,இலங்கையில்,தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,இலங்கை அதிபர் பதவியில் இருந்து நாளை பதவி விலக உள்ளதாக அறிவித்த கோத்தபய ராஜபக்சே,பதவி விலகல் கடிதத்தில் இன்றே கையெழுத்திட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்