நடிகை பிந்து மாதவியின் அப்பார்ட்மென்டில் உள்ளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பிந்து மாதவி, ஒரு மாடலிங் துறையை சார்ந்தவர் என்பதால் ஒரு விளம்பர படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பிரபலமானர். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான கழுகு 2 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் மாயன் மற்றும் யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பிந்து மாதவி தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த அப்பார்ட்மென்டில் உள்ள அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்பார்ட்மென்ட் கேட்டை அதிகாரிகள் இழுத்து மூடியதாகவும், 14 நாட்கள் யாரும் வெளியே செல்ல கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார் .
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…