சீனாவுக்கு பெரிய அடி.! 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டம் சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம்

Default Image

சீனாவின் லட்சிய திட்டம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அறிவித்ததால் சீன அரசாங்கம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

கென்யாவில் உள்ள  நீதிமன்றம் சீனா சாலை மற்றும் பிரிட்ஜ் கார்ப்பரேஷனுக்கு சிஆர்பிசி வழங்கப்பட்ட 3.2 பில்லியன் டாலர் ரயில் ஒப்பந்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யும் போது நீதிமன்றம் இந்த அறிப்பை அறிவித்துள்ளது. மேலும் 3.2 பில்லியன் டாலர் சீன நிதியுதவி தரும் ஸ்டாண்டர்ட் கேஜ் ரயில்வே எஸ்ஜிஆர் திட்டத்தை வாங்குவதில் அரசு நடத்தும் கென்யா ரயில்வே நாட்டின் சட்டத்தை மீறியதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்து பார்க்கும்போது. சீனாவின் எக்சிம் வங்கி முன்பு மொம்பசாவிலிருந்து நைரோபி வரை ரயில் பாதை அமைக்க  தலா 1.6 பில்லியன் டாலர் இரண்டு கடன்களை பெற்றது. அதனை பின் அது நைவாஷா வரை நீட்டிக்கப்பட்டது. இந்த பாதையில் ஒரு பெரிய பகுதியை 2017 இல் நடைபெற்ற பின் சீன சிஆர்பிசியின் துணை நிறுவனமான ஆப்பிரிக்கா ஸ்டார் ரயில்வே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது. அரசு நடத்தும் கென்ய இரயில்வே இப்பொது 380 மில்லியன் டாலர்களை ஆப்பிரிக்கா ஸ்டார் ரயில்வேக்கு கட்டணமாக செலுத்த உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்