பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணம்.! உருக்கத்துடன் பதிவிட்ட இயக்குனர் சேரன்.!

Default Image

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சேரன் உருக்கத்துடன் பதிவை வெளியிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா .இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் அதில் போட்டியாளரான சேரன் அவர்கள் லாஸ்லியாவை மகளாக நினைத்து அரவணைத்ததும்,அவரை லாஸ்லியா சேரப்பா என்று அழைத்ததும் பார்ப்பவர்களுக்கு அழகாக இருந்தது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா மட்டுமின்றி அவரது தந்தையான மரியநேசனும் மிகவும் பிரபலமானார் .தந்தை ,மகளின் பாசத்தை கண்டு அனைவரது கண்களிலுமே கண்ணீர் வந்தது என்றே கூறலாம்.அந்த வகையில் லாஸ்லியாவின் தந்தை இன்று திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது லாஸ்லியாவின் சேரப்பாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு ஆறுதலை தெரிவித்துள்ளார். அதில் லாஸ்லியா அவரது தந்தையின் மீது எத்தனை அன்பும் ,கனவும் வைத்திருந்தார் என்பது நன்றாக தெரியும்.இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படி தாங்குவாய் மகளே .சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் , குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை .எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்