அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணத்தில் பைடன் முன்னிலை வகிக்கும் நிலையில், பைடனின் ஆதரவாளர்கள் ஆடல், பாடலுடன் கொண்டாடி வருகின்றனர்.
உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
மேலும், பென்சில்வேனியா உட்பட 3 மாகாணங்களில் வாக்குகளை எண்ணுவதிலும், பைடனுக்கு ஆதரவாக முறைகேடுகள் நடப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் வழக்குகளை ஜார்ஜியா, மிக்சிகன் மாகாண நீதிமன்றங்கள் நிராகரித்துள்ள நிலையில், ஜார்ஜியா அரசு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு தெரிவித்துள்ளது.
அதன்படி நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 16 வாக்குகளைக் கொண்ட ஜார்ஜியாவிலும், பென்சில்வேனியா மாகாணத்தில் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை வகித்து வருகிறார். இதன்காரணமாக பைடனின் ஆதவாளர்கள், நியூயார்க் நகர வீதிகளில் ஆடல், பாடலுடன் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…