“ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்!- அதிபர் ட்ரம்ப்

Default Image

கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வதந்திகளை பரப்பி வருவதாகவும், அதற்காக இருவரும் மன்னிப்பு கேட்கவேண்டும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.

அந்தவகையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வதந்திகளை பரப்பி வருவதாகவும், அதற்காக அவர்கள் இருவரும் மன்னனிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்