பாகுபலி வில்லனுக்கு திருமணம்.! என்றைக்கு தெரியுமா.!

Published by
Ragi

பாகுபலி வில்லனுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளாக் பஸ்டர் படமான பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி. அவர் அதனையடுத்து ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில காலமாக ராணா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். அந்த பெண் ஹைதராபாத்தில் உள்ள டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனரான மிஹீகா பஜான் என்பவராவர். இந்த நிலையில் ராணாவின் அப்பாவும், தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராணா மற்றும் மிஹீகா இருவரும் காதல் செய்வதாகவும், இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்க கூடும் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் இரு வீட்டாரின் முன்னிலையிலும் ரோகா என்ற பூமுடித்தல் விழாவை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது

இந்த நிலையில் ராணாவின் அப்பாவும், தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு தனது மகனின் திருமணத்தை ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் டைம் ஆஃப் இந்தியா என்ற நாளிதழின் அறிக்கையின் படி மிஹீகா ஒரு மார்வாரி குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் இரண்டு நாட்களாக இரண்டு திருமண நிகழ்வுகளும் தெலுங்கு மற்றும் மார்வாரி மரபின் படி நடைபெறும் என்றும் கூறியுள்ளார். மேலும் மணமகளின் மஹீகாவின் தாயாரான பண்டி பஜாஜ் தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அரசாங்க விதிகளை பின்பற்றி கொண்டு திருமண நிகழ்வுகள் நிச்சயிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ராணா இதுவரை இதனை குறித்த எந்த தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

14 minutes ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

2 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

15 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

17 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

17 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

20 hours ago