ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பரவுவது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், ஓமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் மற்ற வைரஸ்களை விட வீரியமிக்கதா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த வகை வைரஸ் பரவலை தற்போது பயன்படுத்தப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையிலேயே கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பரவுவது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பின்பற்றுமாறும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…