நமது போனில் உள்ள தரவுகளை திருடும் நெட்ஃபிலிக்ஸ் குளோன்.
மக்கள் தங்களது நேரத்தை செலவிட பொழுதுபோக்கும் பிரபல செயலியாக நெட்பிளிக்ஸ் இருக்கிறது. இந்த நெட்பிளிக்ஸ் போன்று, குளோன் செயலி உருவாக்கப்பட்டு, பல பிரச்சினைகளுக்கு வழிவகுள்ளது. தற்போது பிளே ஸ்டோரில் இந்த ஒரு புதிய செயலியால், புது பிரச்னை கிளம்பியுள்ளது.
அதாவது, நெட்ஃபிலிக்ஸ் குளோனை பயன்படுத்தினால், அது ஒரு பயனரின் வாட்ஸ்அப் செய்திகளை திருடி, பின் வாட்ஸ்அப் செய்திகளுக்கு தானாக பதில் அளித்து அதன் மூலம் தன்னை பரப்பிக் கொள்கிறது. இது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளனர். இது ஒருவரின் ஆண்ட்ராய்டு மொபைலில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பின் என்ன செய்கிறது என்றால், பயனர்கள் அதை மற்ற பயன்பாடுகள் மற்றும் அறிவிப்புகளின் மேல் பயன்படுத்துமாறு அது அனுமதி கேட்கிறது.
இவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் இது மோசடி உள்நுழைவு திரைகளை ஏற்ற அனுமதித்து, பின்னர் பயனரின் சாதனத்திலிருந்து முக்கியமான உள்நுழைவு சான்றுகளை அது திருடுகிறது. இதனை பயன்படுத்தும் போது இது அறிவிப்புகள் நமக்கு வரும் அறிவிப்புகளை பெற்று, அதற்கு தானாக பதிலளிக்கக் கூடிய திறனைப் பெறுகிறது. மேலும் ஒருவர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன் முழுவதையும் தன்வசப்படுத்திக் கொள்கிறது.
இது பயனர்களின் தனிப்பட்ட செய்திகளை திருடுவது, வங்கி மற்றும் அதை சார்ந்த சேவைகளின் பாஸ்வேர்டுகளை திருடுவது போன்ற முக்கியமான தரவுகளை தன் வசம் கையகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
இதுகுறித்து செக்பாயிண்டின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இந்த தனித்துவமான அச்சுறுத்த பயன்படுத்தும் போது, அவர்களிடம் இருந்து தகவல்களை திருடி, தவறான முறையில் பரப்பவும், பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளில் இருந்து சான்றுகளையும் தரவுகளையும் திருடவும் உதவக் கூடும். எனவே இது தற்போது தடை செய்யப்பட்டு இருந்தாலும், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் வேறு ஏதாவது வழிகளில் வருகிறதா என்பதையும் ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…