2020 ஆம் ஆண்டில் இதுவே எனக்கு கிடைத்த சிறந்த பரிசு என மெக்ஸிகோவில் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திய செவிலியர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, ஃபைசர் தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதலுக்கு பிறப்பிக்கப்பட்டு, இங்கிலாந்தில் போடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மெக்ஸிகோவிலும் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய நிலையில், அதனை முதல் முதலாக 59 வயதான மரியா ஐரீன் ராமிரெஸ் என்ற செவிலியர் போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து பேசிய அவர், “2020 ஆம் ஆண்டில் இதுவே எனக்கு கிடைத்த சிறந்த பரிசு” என கூறினார். மேலும், முதற்கட்டமாக 3,000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டதாகவும், இரண்டாம் கட்டமாக 50,000 தடுப்பூசிகளை போட திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…