பெய்ரூட் குண்டுவெடிப்பு.. ஏற்பட்ட சேதத்தை செயற்கைக்கோள் மூலம் வெளியிட்ட நாசா..!

Published by
murugan

லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விபத்து இதனால் நடந்தது என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இந்த விபத்தால் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாசாவின் இமேஜிங் மற்றும் பகுப்பாய்வு குழு மற்றும்  சிங்கப்பூரின் பூமி ஆய்வகத்துடன் இணைந்து, செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட செயற்கை துளை ரேடாரை பயன்படுத்தி பெய்ரூட்டில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவின் புகைப்படத்தை வெளிட்டு உள்ளது.

விண்வெளியில் இருந்து செயற்கை துளை ரேடார் பூகம்பம் போன்ற ஒரு பெரிய நிகழ்வுக்கு முன்னும் பின்னும் நிலத்தில் ஏற்பட்ட மேற்பரப்பு மாற்றங்களைக் காட்டுகிறது. இந்நிலையில், இந்த வெடி விபத்தில் ஏற்பட்ட பயங்கர சேதத்தை இது காட்டுகிறது.

நாசா வெளியிட்ட வரைபடத்தில், பெய்ரூட் துறைமுகத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இருண்ட சிவப்பு பிக்சல்கள் – மிகக் கடுமையான சேதத்தைக் குறிக்கின்றன. ஆரஞ்சு நிறத்தில் உள்ள பிக்சல்கள் மிதமான சேதத்தையும்,  மஞ்சள் நிற பிக்சல்கள் ஓரளவு குறைவான சேதத்தை குறிக்கிறது. மேலும், ஒவ்வொரு பிக்சலும் 30 மீட்டர்பரப்பளவைக் குறிக்கிறது.

இது போன்ற வரைபடங்கள் மக்களுக்கு உதவி தேவை செய்ய மோசமாக சேதமடைந்த பகுதிகளை அடையாளம் காண உதவும்.

 

Published by
murugan

Recent Posts

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

9 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

9 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

10 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

11 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

12 hours ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

12 hours ago