தடுப்பூசி போட்டுக் கொண்டால்,இலவச பீர், இலவச விளையாட்டு டிக்கெட், தடுப்பூசி போடும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 21 வயதிற்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 63%பேர் தான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். வரும் ஜூலை 4-ம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அதற்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக வெள்ளை மாளிகை பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இலவச பீர், இலவச விளையாட்டு டிக்கெட், தடுப்பூசி போடும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
மேலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…