கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வீட்டிற்குள் முடக்கி போட்டிருந்தாலும், பொதுமக்களை அவர்கள் குடுமபத்தினரோடு அதிக நேரம் செலவிட வைத்துள்ளது. மத இனம் பேதமின்றி அனைவரிடம் பழக வைத்துள்ளது. விலங்குகள், பறவைகள் சுதந்திரமாக மனிதர்கள் இடையூறுகள் இன்றி சுற்றி வருகின்றன.
இந்த நேரத்தில் ஜெருசேலத்தில் மதங்களை கடந்த மனிதம் வெளிப்பட்டு இருக்கிறது. அந்த நெகிழ்ச்சி சம்பவம் உலகம் முழுக்க பரவி மாதங்களுக்கு அப்பாற்பட்டது மனிதம் என உணர்த்த தொடங்கியுள்ளது.
ஜெருசேலத்தில் மருத்துவ ஊழியர்களாக பணியாற்றி வரும் யூத மதத்தை சேர்த்த அவர்ஹம் பிண்ட்ஸும், இஸ்லாமியரான ஜோஹர் அபுவும் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று இருவரும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது,
அப்பணிகளுக்கு இடையே இருவரும் தங்கள் மத பிராத்தனைகளை ஒரே இடத்தில் ஒன்றாக வழிபட்டனர். யூதரான அவர்ஹம் பிண்ட்ஸ் ஜெருசேலத்தை பார்த்த வண்ணமும், இஸ்லாமியரான ஜோஹர் அபு மெக்காவை பார்த்த வண்ணமும் தங்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். மதங்களை கடந்த மனிதம் பாராட்டப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…