மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருங்க.. ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜப்பானில் மேற்கு பகுதிகளில் இன்று பிற்பகல் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் சுமார் 30 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. இதில், 7.6 ரிக்டர் அளவு வரை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதியில் உள்ள கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகும் காட்சிகள், சுனாமி அலைகள் ஊருக்குள் புகுறும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சுனாமி எச்சரிக்கை என ஜப்பான் பேரிடரில் தத்தளித்து வருகிறது. மீண்டும் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் குலுங்கும் ஜப்பான்.. சுனாமி அலைகளால் அதிர்ச்சி! பதபதவைக்கும் வீடியோ காட்சிகள்…

இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகையில், ஜப்பான் மக்கள் மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும்.

சேதங்கள் குறித்து விரைவில் மதிப்பிட வேண்டும். உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும், மனித உயிருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது உள்ளிட்டவையில்  அவசரகால பேரிடர் அடிப்படையில் அரசு செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

32 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

38 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

56 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago