அமெரிக்காவில் காற்றில் பறந்த வங்கி பணம்..!கைநிறைய அள்ளி சென்ற மக்கள்..!

Default Image

அமெரிக்கா சாலையொன்றில் வங்கி பணத்தை எடுத்துச்சென்ற வாகனத்தின் கதவு திறந்து காற்றில் பணம் பறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் வங்கியிலிருந்து பணத்தை எஃப்.பி.ஐ-க்கு எடுத்து செல்லும் டிரக் வாகனத்தின் கதவு திறந்து சாலையில் பணம் பறக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க தொடங்கினர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் அந்த நாட்டு காவல்துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில் யார் பணத்தை எடுத்தார்கள் என்பதை வைத்து திரும்ப பெற உள்ளனர். மேலும், பணத்தை எடுத்தவர்கள் திரும்ப தரவும் என்று வங்கி நிர்வாகம் அளித்த அறிவிப்பை முன்னிட்டு பலரும் எடுத்த பணத்தை திரும்ப செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலமாக எந்த வாகனம் அந்த சாலை வழி சென்றுள்ளது என்பதை வைத்து பணத்தை எடுத்தவர்களிடமிருந்து காவல்துறையினர் திரும்ப பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிறகு பணத்தை எடுத்து சென்ற ட்ரக் வாகனத்தை ஓட்டி சென்ற ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்