புதிய பிரிவை அறிவிக்க உள்ள வங்கதேசத்தின் ஐஎஸ்ஐஎஸ் பிரிவு

Default Image

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் வங்கதேச  பிரிவு அல்லது நியோ ஜே.எம்.பி.,  ‘பெங்கால் உலாயத்’ என்ற புதிய பிரிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் இந்த புதிய பிரிவு 2020 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பக்ரீத்திற்கு  முன்னதாக நாட்டில் உள்ள போலீஸ் தலைமையகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது தூதரகங்களை குறிவைக்க உள்ளதாக போலீஸ் தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால்  டாக்கா பெருநகர காவல்துறை, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடுகடந்த குற்றம் (சி.டி.டி.சி), பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு மற்றும் விரைவான நடவடிக்கை பட்டாலியன் (ஆர்ஏபி) போன்ற பல பிரிவுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புலனாய்வு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,  எங்கள் சிறப்பு  பிரிவுகள்  உட்பட எங்கள் அனைத்து பிரிவுகளையும் நாங்கள் எச்சரித்துள்ளோம் , மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்