வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல்: அவாமி லீக் கட்சி அபார வெற்றி …!

Default Image

வங்கதேச தேர்தலில் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 288 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வந்ததால் பாதுகாப்பிற்க்காக சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் ஆளுங்கட்சியை சார்ந்த ஒருவரை, எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் அடித்துக் கொன்றனர்.இதனால் பல இடங்களில் வன்முறை மற்றும் மோதல் வெடித்தது.இந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.சுமார் 64 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மொத்தமுள்ள 300  நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 288 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. முதன்மையான எதிர்க்கட்சியான வங்கதேசத் தேசியக் கட்சி 6 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஹெலால் உத்தீன் அகமது தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்