இந்த ஆண்டு காதலர் தினம் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கோலாகலமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவ காரணமாக காதலர் தின கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுமா என சில இடங்களில் சந்தேகமான சூழ்நிலை இருந்தாலும் இலங்கையில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
விதிகளை மீறி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மற்றும் அதற்கான கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அந்நாட்டின் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அவர்கள், சுகாதாரத் துறையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்தப்படக் கூடிய காதலர் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அவ்வாறு கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…