பாலாஜி தான் கூறி வரும் மிஸ்டர் இந்தியா பட்டம் காலாவதி ஆனதாக ஜோ மைக்கல் கூறியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் வாக்குவாதங்களும் , சண்டைகளும் என்று சுவாரசியமாக போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தந்திரமாக விளையாடும் போட்டியாளர் பாலாஜி .
இவர் ஒரு டாஸ்க்கில் தான் மிஸ் இந்தியா என்று கூறியதுடன் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சவுத் இந்தியா என்ற நிகழ்ச்சியையும் நடத்தியதாக கூறியிருந்தார் . மேலும் சனம் அவர்களிடம் உங்கள் நிகழ்ச்சியை போன்று டுபாக்கூர் கிடையாது என்று அவரது நிறுவனத்தை விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . இந்த நிலையில் தனது நிறுவனம் குறித்து பாலாஜி கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லையேல் வக்கீல் நோட்டீஸ் பாலாஜிக்கு அனுப்பப்படும் என்றும் பாலாஜி விமர்சனம் செய்த நிறுவனத்தின் தலைவரான ஜோ மைக்கல் கூறியுள்ளார்.
மேலும் பேசிய ஜோ மைக்கல் , அவர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சவுத் இந்தியா என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும், அதற்கு அவர் உரிமையாளரும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஜூன் மாதமே பாலாஜியின் மிஸ்டர் இந்தியா பட்டம் காலாவதி ஆனதாகவும் , அதன் பின்னரும் அவர் அதனை பயன்படுத்துவதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…