பாலாஜி தான் கூறி வரும் மிஸ்டர் இந்தியா பட்டம் காலாவதி ஆனதாக ஜோ மைக்கல் கூறியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் வாக்குவாதங்களும் , சண்டைகளும் என்று சுவாரசியமாக போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தந்திரமாக விளையாடும் போட்டியாளர் பாலாஜி .
இவர் ஒரு டாஸ்க்கில் தான் மிஸ் இந்தியா என்று கூறியதுடன் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சவுத் இந்தியா என்ற நிகழ்ச்சியையும் நடத்தியதாக கூறியிருந்தார் . மேலும் சனம் அவர்களிடம் உங்கள் நிகழ்ச்சியை போன்று டுபாக்கூர் கிடையாது என்று அவரது நிறுவனத்தை விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . இந்த நிலையில் தனது நிறுவனம் குறித்து பாலாஜி கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லையேல் வக்கீல் நோட்டீஸ் பாலாஜிக்கு அனுப்பப்படும் என்றும் பாலாஜி விமர்சனம் செய்த நிறுவனத்தின் தலைவரான ஜோ மைக்கல் கூறியுள்ளார்.
மேலும் பேசிய ஜோ மைக்கல் , அவர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சவுத் இந்தியா என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும், அதற்கு அவர் உரிமையாளரும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஜூன் மாதமே பாலாஜியின் மிஸ்டர் இந்தியா பட்டம் காலாவதி ஆனதாகவும் , அதன் பின்னரும் அவர் அதனை பயன்படுத்துவதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…