முக்கியச் செய்திகள்

கனமழை தொடரும்.. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்ச்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

மழை நிலவரம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு வானிலை தகவல்களை தெரிவித்தார்.

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.! ரெட் அலர்ட் – அதிகனமழை அறிவிப்பு.!

அவர் கூறுகையில், தமிழக கடற்கரை பகுதியில் வரும் 26ஆம் தெற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், வரும் 27ஆம் தென்கிழக்கு அந்தமான் கடற்கரை பகுதியில் 55 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிருவுறுத்தப்டுகிறது.

வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 1 முதல் தற்போது வரையில் தமிழகத்தில் 28 செமீ பெய்துள்ளது. வழக்கமாக 32 செமீ அளவு வரையில் பெய்யும். அதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 10 சதவீதம் குறைவு.

வளிமண்டல சுழற்சியானது தமிழக பகுதியில் இருந்து கேரளாவை நோக்கி செல்கிறது. அதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை தொடரும்.

வரும் 26ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாகும், அதிக கனமழை என்பது தற்போது கன்னியாகுமரி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் பெய்யும். அக்டோபர்,, நவம்பர் டிசம்பர் என்பது தான் வடகிழக்கு பருவமழை காலம்.

சென்னையை பொறுத்தவரையில், 41செமீ  மழை பெய்துள்ளது. வழக்கமாக 58 செமீ பெய்யும். அப்படி பார்த்தல், வழக்கத்தை விட 28 சதவீதம் குறைந்த அளவு மழை பெய்துள்ளது.  என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago