பக்ரீத் ஸ்பெஷல் : அட்டகாசமான சிக்கன் தம் பிரியாணி எப்படி செய்வது…?

Default Image

பக்ரீத் பண்டிகை வந்தாலே பெரும்பாலும் இஸ்லாம் சகோதரர்கள் வீட்டில் பிரியாணி தான் ஸ்பெஷலாக செய்வார்கள். இவ்வாறு பிரியாணி செய்யும் பொழுது தங்கள் உறவினர்கள், அருகிலுள்ள நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வது வழக்கம். ஆடு, மாடு, கோழி மற்றும் ஒட்டகங்களிலும் பிரியாணி செய்வார்கள். ஆனால், சிலருக்கு இந்த பிரியாணி எப்படி செய்வது என தெரியாது. நாம் வழக்கமாக செய்யும் பிரியாணி போல இல்லாமல் இது சற்று வித்தியாசமான முறையிலும், அட்டகாசமான சுவையிலும் இருக்கும். இன்று எப்படி பக்ரீத் ஸ்பெஷல் சிக்கன் தம் பிரியாணி செய்வது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பக்ரீத் பண்டிகை

பக்ரீத் பண்டிகை உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படக்கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளார் அவர்களின் தியாகத்தை நினைவு கூறுவது தான் இந்த பக்ரீத் பண்டிகையின் சிறப்பு.

தமிழகம் முழுவதும் ஜூலை 21ஆம் தேதியாகிய இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாளாகிய இந்த பக்ரீத் நாளில் இறைவனுக்கு பலி செலுத்துவது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் அசைவ உணவுகளை சமைத்து அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்தளித்து உண்டு மகிழ்வது வழக்கம். இதற்காக இன்று நாம் சிக்கன் தம் பிரியாணி பாய் வீட்டு ஸ்டைலில் எப்படி செய்வது என அறியலாம்.

தேவையான பொருட்கள்

  • எண்ணெய்
  • சிக்கன்
  • பாஸ்மதி அரிசி
  • வெங்காயம்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • பிரியாணி மசாலா
  • சீராக தூள்
  • தயிர்
  • கொத்தமல்லி
  • புதினா
  • மல்லி தூள்
  • உப்பு
  • பட்டை
  • கிராம்பு
  • பிரியாணி இலை
  • அன்னாசி பூ
  • ஏலக்காய்
  • இஞ்சி பூண்டு விழுது
  • குங்கும பூ
  • நெய்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிராம்பு, பட்டை, அன்னாசி பூ, ரோஜா இதழ், உப்பு தேவையான அளவு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து 80% வேகவைத்து வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

அதன் பின் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு சிக்கன் எடுத்து, அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தயிர், பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துள்ள வெங்காயம் சிறிதளவு, பிரியாணி மசாலா,  சீரகத்தூள், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு இவற்றை ஒரு கடாயில் சேர்த்து 15 நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் தம் போடுவதற்கு ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கொள்ள வேண்டும். பின் நாம் வேக வைத்து எடுத்துள்ள சிக்கனை முதலில் போட வேண்டும். அதன் பின்பு வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்க்க வேண்டும். பின்பு மீண்டும் சிக்கனை போட்டு அதற்கு மேல் பாஸ்மதி அரிசியை போட்டு, பொரித்து வைத்துள்ள வெங்காயம் புதினா இலை, கொத்தமல்லி ஆகியவை சேர்க்க வேண்டும்.

அதனுடன் குங்குமப் பூவை சூடான பாலுடன் கலந்து ஊற்ற வேண்டும். பின்பு மீண்டும் மீதமுள்ள அனைத்து சிக்கனையும் சேர்த்து கொள்ள வேண்டும். இதன் மேல் வேக வைத்து எடுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து மேலே கொத்தமல்லி, புதினா, குங்குமப்பூ பால், பொரித்த வெங்காயம் மற்றும் நெய் ஊற்ற வேண்டும். பின் காற்று வெளியேறாதபடி மூடி தம் போட வேண்டும்.

briyani

 

அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் அட்டகாசமான ஹைதராபாத் பிரியாணி தயார். பக்ரீத் தினமான இன்று உங்கள் வீட்டில் ஆடு, மாடு வாங்க முடியாவிட்டாலும் சிக்கன் வாங்கி வீட்டில் இந்த தம் பிரியாணியை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh