பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான செட்டாக், இந்திய சந்தை விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பஜாஜ் நிறுவனம், இந்தாண்டு தொடக்கத்தில் தனது புதிய “செட்டாக்” என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மேலும் இது, பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இந்த “செட்டாக்” ரக ஸ்கூட்டர்கள், புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டும் விற்பனை செய்து வருகிறது.
இந்த செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 3kWh லித்தியம் திறன் கொண்ட அயன் பேட்டரி மற்றும் 4KW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது, எலக்ட்ரிக் பைக்கின் என்ஜின் என்று அழைக்கப்படும். அதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டர் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடும் எனவும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 வரை பயணிக்கலாம் எனவும், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணிநேரம் ஆகும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், செட்டாக் ரக ஸ்கூட்டரின் துவக்க விலை, ரூ. 1.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர், தொடக்கம் முதலே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், இந்த வகையான ஸ்கூட்டர் மாடல் ஆயிரம் யூனிட்களை கடந்து விற்பனை செய்துள்ளதாக பஜாஜ் நிர்வாகம் கூறியது. கொரோனா ஊரடங்கால் விற்பனை சரிந்துள்ளதாக கூறிய பஜாஜ் நிறுவனம், தற்பொழுது இதன் விற்பனை கணிசமாக உயரதொடங்கியதாகவும், செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே வருவதாகவும் பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…