அப்ரிடியை தொடர்ந்து பாக். முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா உறுதி

Default Image

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசப் ரசா கிலானிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி  வருகிறது.இதனை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் பிறப்பித்துள்ளது.மேலும் உலக சுகாதார அமைப்பு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியது.

பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது.தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசப் ரசா கிலானிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்